என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தனுஷ்கோடி கடலோர பகுதியில் ஆமை முட்டைகள் சேகரிப்பு
Byமாலை மலர்28 Jan 2022 4:27 AM GMT (Updated: 28 Jan 2022 4:27 AM GMT)
தனுஷ்கோடி கடலோர பகுதியில் இந்த வருடம் ஆமைகள் முட்டையிடும் காலம் 10 நாட்கள் தாமதமாக தொடங்கியுள்ளது.
ராமேசுவரம்:
ராமேசுவரம் அருகே மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா பகுதியான மண்டபம் சரகத்தில் புதுரோடு முதல் அரிச்சல்முனை வரை கடல் ஆமைகள் முட்டை இடும் காலம் தற்போது தொடங்கி உள்ளது.
நேற்று முதல் ராமேசுவரம், தனுஷ்கோடி கடலோரப்பகுதியில் 2 குழிகளில் சுமார் 244 ஆமை முட்டைகளை வனத்துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அவை ராமேசுவரம் எம்.ஆர்.சத்திரம் பகுதியில் அமைந்துள்ள ஆமை முட்டை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
தனுஷ்கோடி கடலோர பகுதியில் இந்த வருடம் ஆமைகள் முட்டையிடும் காலம் 10 நாட்கள் தாமதமாக தொடங்கியுள்ளது. இது பொதுவாக கடந்த 4 வருடங்களில் ஒவ்வொரு ஆண்டும் 15 தினங்கள் தாமதமாகத்தான் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் கடல் சீற்றம், நீரோட்டம், கடல் தட்ப வெட்பம் போன்ற காரணங்களே என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். காப்பகத்தில் ஆமை முட்டைகள் பொரிக்கப்பட்டு பின்னர் கடலில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமேசுவரம் அருகே மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா பகுதியான மண்டபம் சரகத்தில் புதுரோடு முதல் அரிச்சல்முனை வரை கடல் ஆமைகள் முட்டை இடும் காலம் தற்போது தொடங்கி உள்ளது.
நேற்று முதல் ராமேசுவரம், தனுஷ்கோடி கடலோரப்பகுதியில் 2 குழிகளில் சுமார் 244 ஆமை முட்டைகளை வனத்துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அவை ராமேசுவரம் எம்.ஆர்.சத்திரம் பகுதியில் அமைந்துள்ள ஆமை முட்டை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
தனுஷ்கோடி கடலோர பகுதியில் இந்த வருடம் ஆமைகள் முட்டையிடும் காலம் 10 நாட்கள் தாமதமாக தொடங்கியுள்ளது. இது பொதுவாக கடந்த 4 வருடங்களில் ஒவ்வொரு ஆண்டும் 15 தினங்கள் தாமதமாகத்தான் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் கடல் சீற்றம், நீரோட்டம், கடல் தட்ப வெட்பம் போன்ற காரணங்களே என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். காப்பகத்தில் ஆமை முட்டைகள் பொரிக்கப்பட்டு பின்னர் கடலில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X