என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருமங்கலம் அருகே லாரி மீது கார் மோதி முதியவர் பலி
Byமாலை மலர்28 Jan 2022 4:21 AM GMT (Updated: 28 Jan 2022 4:21 AM GMT)
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
நெல்லை தச்சநல்லூர் அருகே தாராபுரம் பக்கமுள்ள வடக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 60). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் வாடகைக்கு கார் எடுத்து நேற்று இரவு நெல்லையில் இருந்து பொள்ளாச்சிக்கு சுற்றுலா புறப்பட்டார்.
காரை அதே பகுதியை சேர்ந்த ராமர் மகன் பாலமுருகன்(25) என்பவர் ஓட்டினார். அவர்களது கார் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் நள்ளிரவில் வந்து கொண்டிருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து நெல்லையில் இருந்து சிமெண்டு ஏற்றிக்கொண்டு திருமங்கலம் நோக்கி சென்ற லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சுனில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து பற்றி தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய மற்ற 3 பேரை மீட்க முற்பட்டனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து அங்கு வந்த கள்ளிக்குடி தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு இடிபாடுகளில் சிக்கிய கார் டிரைவர் பாலமுருகன் மற்றும் 3 பேரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிரிழந்த சுனில் உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்தால் கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல்லை தச்சநல்லூர் அருகே தாராபுரம் பக்கமுள்ள வடக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 60). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் வாடகைக்கு கார் எடுத்து நேற்று இரவு நெல்லையில் இருந்து பொள்ளாச்சிக்கு சுற்றுலா புறப்பட்டார்.
காரை அதே பகுதியை சேர்ந்த ராமர் மகன் பாலமுருகன்(25) என்பவர் ஓட்டினார். அவர்களது கார் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் நள்ளிரவில் வந்து கொண்டிருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து நெல்லையில் இருந்து சிமெண்டு ஏற்றிக்கொண்டு திருமங்கலம் நோக்கி சென்ற லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சுனில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து பற்றி தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய மற்ற 3 பேரை மீட்க முற்பட்டனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து அங்கு வந்த கள்ளிக்குடி தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு இடிபாடுகளில் சிக்கிய கார் டிரைவர் பாலமுருகன் மற்றும் 3 பேரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிரிழந்த சுனில் உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்தால் கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X