search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பாளை, மேலப்பாளையம் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை

    பாளை, மேலப்பாளையம் பகுதியில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் இருக்காது என நெல்லை நகர்புற மின் விநியோக பிரிவு செயற்பொறியாளர் முத்துக்குட்டி தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை நகர்புற விநியோக பிரிவு செயற்பொறியாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பாளை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (29-ந் தேதி) மாதாந்திர பராமரப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே வி.எம்.சத்திரம், கட்டபொம்மன்நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்க நல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத்நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக்திரையங்கு பகுதி, பாளை மார்க்கெட் பகுதி, திருச் செந்தூர் சாலை,

    கான்சாபுரம், திருமலை கொழுந்துபுரம், மணப் படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம், மகா ராஜநகர், தியாகராஜநகர், ராஜ கோபாலபுரம், சிவந்தி பட்டி, அன்புநகர் மற்றும் முருகன் குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    இதேபோல அவர் வெளி யிட்ட மற்றொரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் 29-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்மை மெயின்ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர் புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக் கருங்குளம், முன்னீர்பள்ளம்,

    ஆரைக்குளம், அன்னைநகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரி யாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ்ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணாவீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத்தெரு, பி.எஸ்.என்.கல்லூரி, பெருமாள்புரம், பொதிகைநகர்,

    அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ.காலனி), பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ்நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம் மாள்புரம், கொங்கந் தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச் செல்வி ஆகிய பகுதிகளுக்கும் மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×