என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: பட்டதாரி பெண் தற்கொலை
Byமாலை மலர்27 Jan 2022 10:08 AM GMT (Updated: 27 Jan 2022 10:08 AM GMT)
கோவையில் பியூட்டி பார்லரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் அனுசியா (வயது 24). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் வரதராஜபுரம் காரமராஜர் ரோட்டில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வந்தார்.
இவர் கல்லூரியில் படிக் கும் போது அதே கல்லூரியில் படித்த நாகர்கோவிலை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அனுசியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். படித்து முடித்த பின்னரும் 2 பேரும் காதலை தொடர்ந்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் அனுசியாவின் பெற்றோ ருக்கு தெரிய வந்தது. அவர் கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அனுசியா காதலை கைவிட மறுத்து உறுதியாக இருந் தார். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது வந்தது.
இந்தநிலையில் அவரது பெற்றோர் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு ஒரு வாலிபரை பார்த்து அனுசியாவுக்கு திருமணம் செய்வது என நிச்சயம் செய்தனர். இதனால் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று இவர் தனது பெற்றோரிடம் பியூட்டி பார்லருக்கு செல்லவதாக கூறிவிட்டு சென்றார். அங்கு வைத்து வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்டநேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பியூட்டி பார்லருக்கு சென்று பார்த்தனர். அங்கு தங்களது மகள் தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி யடைந்தனர். பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X