search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்.
    X
    கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்.

    33 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்-கலெக்டர் தகவல்

    தஞ்சை மாவட்டத்தில் 33 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகம் மண்டல துணை தாசில்தார் பாலசுப்பிரமணியன் பேராவூரணி தாலுக்கா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளர். 

    இங்கு பணியாற்றி வந்த கலைவாணன் திருவையாறு தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராகவும்,  இங்கு பணியாற்றி வந்த வெங்கட்ராமன் பூதலூர் தாலுக்கா அலுவலகம் மண்டல துணை தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    பாபநாசம் தாலுக்கா அலுவலகம் மண்டல துணை தாசில்தார் சுப்பிரமணியன் பேராவூரணி தாலுக்கா அலுவலகம் மண்டல துணை தாசில்தாராகவும் , இங்கு பணியாற்றி வந்த கவிதா பட்டுக்கோட்டை 
    தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தார் ஆகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
     
    கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக  தலைமை 
    உதவியாளர் பழனிவேல் ஒரத்தநாடு தாலுக்கா அலுவலகம் மண்டல 
    துணை தாசில்தாராகவும் இங்கு பணியாற்றி வந்த பைரோஜாபேகம் 
    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக பிரிவு தலைமை உதவியாளராகவும்  இங்கு பணியாற்றிய வந்த ஜெயகாந்தி  தஞ்சை கலெக்டர் அலுவலக 
    ஜேபிரிவு தலைமை உதவியாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்த துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    மொத்தம் 33 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×