search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் சபாநாயகர் தனபால் எம்.எல்.ஏ.,
    X
    முன்னாள் சபாநாயகர் தனபால் எம்.எல்.ஏ.,

    முன்னாள் சபாநாயகர் தனபால் வீட்டில் கொள்ளை முயற்சி

    விசாரணையின் முடிவில் எந்த பொருட்கள் கொள்ளை போனது என்பது தெரியவரும்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் தமிழக சட்டமன்ற சபாநாயகருமானவர் தனபாலின் வீடு கணியாம்பூண்டி அருகே உள்ள ரிச் லேண்ட் பகுதியில் உள்ளது. திருப்பூருக்கு அவர் மக்கள் பணியாற்ற வரும் போது இந்த வீட்டில் தங்குவார்.

    இந்நிலையில் இன்று காலை வீட்டை சுத்தம் செய்ய பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து ள்ளனர். இதையடுத்து திருமுருகன் பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளை முயற்சி சம்பவம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில் எந்த பொருட்கள் கொள்ளை போனது என்பது தெரியவரும். முன்னாள் சபாநாயகர் வீட்டில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×