search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த மெக்கானிக் போக்சோவில் கைது

    சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த மெக்கானிக்கை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்
    கரூர் :

    கரூர்  மாவட்டம்  வேலாயு தம்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 35). மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர் அதே பகுதியைச் சேர்ந்த அரசுப்பள்ளியில் படிக்கும் 16  வயது  சிறுமியை கடந்த மார்ச் மாதம் முதல்  பலமுறை   பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதுபற்றி வெளியில் சொன்னால் பல்வேறு பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி சிறுமியை மிரட்டியும் உள்ளார்.

    ஒரு கட்டத்தில் கடுமையான வேதனை அடைந்த அந்த சிறுமி இதுகுறித்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்    புகார்  கொடுத்தார். அதன் பேரில்  போலீசார்  நேற்று போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை  கைது  செய்து கோர்ட்டில்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோல் சிறுமியிடம் தொடர்பிலிருந்த திருப்பூரை சேர்ந்த மற்றொரு நபரான குமார் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவரை யும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×