search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி
    X
    ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி

    மத்திய அரசை கண்டித்து கரூரில் தி.க. ஆர்ப்பாட்டம்

    மத்திய அரசை கண்டித்து கரூரில் தி.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    கரூர்:

    குடியரசு தினவிழா அலங் கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகத்திலிருந்து வ.உ.சி., பாரதியார், வேலுநாச்சியார், மருது சகோரதர்கள், கட்ட பொம்மன் ஆகியோர் இடம் பெற்ற ஊர்தி மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. தமிழர்களை இழிவுப்படுத் தியதாக கூறி மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமையில் கரூர் ஜவஹர் பஜார் காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட  செயலாளர் காளிமுத்து,  பொதுக்குழு உறுப்பினர்  சே.அன்பு, மாவட்ட துணை செயலாளர் ராஜூ,  மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெகநாதன், கிருஷ்ணராயபுரம் பெருமாள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலா ளர்  வழக்கறிஞர் ஜெயராமன், வழக்கறிஞர் ராஜேந்தி ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதே  கோரிக்கையை வலியுறுத்தி,  சுதந்திரப் போராட்ட  தியாகிகளின் தியாகத்தை நெஞ்சில் நிறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கரூர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் கரூர் பேருந்து நிலைய ரவுண் டானா அருகே வ.உ.சி., பாரதியார், வீரபாண்டிய கட்ட பொம்மன், வேலு நாச்சியார் ஆகியோரது முகமூடிகளை அணிந்து உறுதிமொழியேற்றனர்.
    Next Story
    ×