search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    விஸ்வநாதபேரியில் நாளை மின்தடை

    கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட விஸ்வநாதப்பேரி உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (27-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    சிவகிரி:

    கடையநல்லூர் கோட்ட மின் வினியோக பிரிவு செயற் பொறியாளர் 
    நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட விஸ்வநாதப்பேரி உபமின் நிலையத்தில் நாளை 27-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. 

    இதில் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வ நாதப்பேரி, வடக்கு சத்திரம், தெற்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடப்பட்டி மற்றும் வடுகபட்டி ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது எனவும், மின்கம்பிகளில் தொடும் நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

     

    Next Story
    ×