என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்26 Jan 2022 9:30 AM GMT (Updated: 26 Jan 2022 9:30 AM GMT)
வேறோரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மனைவி சந்தேகப்பட்டார்
கோவை:
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 35). கூலிதொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி(30). இந்த நிலையில் ராமசாமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்ததாக கடந்த சில நாட்களாக அவரது மனைவி தனலட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் கணவன்& மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் ராமசாமிக்கும், அவரது மனைவி தனலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தனலட்சுமி கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ராமசாமி மனவேதனையுடன் இருந்து வந்தார். மறுநாள் காலை வீட்டை விட்டு வெகுநேரம் ராமசாமி வெளியில் வராமல் இருந்தார்.
இதையடுத்து அவரது வீட்டின் அருகே வசித்து வரும் பெண் ஒருவர் வீட்டின் உள்ளே பார்த்தார். அப்போது ராமசாமி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X