என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசுப் பேருந்தில் பெண் பயணியிடம் திருட்டு
Byமாலை மலர்26 Jan 2022 8:50 AM GMT (Updated: 26 Jan 2022 8:50 AM GMT)
கரூர் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் பர்சில் வைத்திருந்த மூன்றரை பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர் திருடி சென்றார்.
கரூர்:
கோவை ரத்தினபுரி கணேஷ் நகரை சேர்ந்தவர் கண்ணையன். இவரது மனைவி பவுலின் தெரசா (வயது 48).
இவர் கோவையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 22 ஆம் தேதி குளித்தலையில் இருந்து கரூர் வருவதற்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.
சிறிது தூரம் வந்த நிலையில் அவரது பர்சில் வைத்திருந்த மூன்றரை பவுன் ஆரம் நகை மற்றும் ரூ.3,500 ஆகியவற்றை காணவில்லை. அருகில் அமர்ந்திருந்த சக பயணிகளிடம் கேட்டபோது யாரும் தங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டனர்.
பவுலின் தெரசா பர்சில் நகை வைத்திருந்ததை முன்கூட்டியே அறிந்திருந்த யாரோ மர்ம நபர்தான் அதனை திருடி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து குளித்தலை போலீசில் பவுலின் தெரசா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X