search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தேனி மாவட்டத்தில் மது விற்றவர்கள் கைது

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மது விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்
    தேனி, ஜன:

    அல்லிநகரம் போலீசார் மதுராபுரி பிரிவு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற வேல்குமார் (வயது28) என்பவரை கைது செய்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அன்னஞ்சி விலக்கு-கிருஷ்ணாநகர் சாலையில் மது விற்ற முத்துச்செல்வம் (25) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    தேனி பைபாஸ் சாலையில் மது விற்ற விக்னேஷ் (20) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஜெயமங்கலம் போலீசார் குள்ளப்புரம் பிரிவு ரோடு பகுதியில் ரோந்து சென்ற போது மது விற்ற சந்துரு (21) என்பவரை கைது செய்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கம்பம் வடக்கு போலீசார் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றபோது புகையிலை பொருட்கள் விற்ற முத்துகருப்பையா (41) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×