search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகை அணை
    X
    வைகை அணை

    வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

    வைகை அணையின் நீர்மட்டம் 69.36 அடியாக உள்ளது. 719 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 150 கனஅடி நீர் கூடுதலாக சேர்த்து 869 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பருவமழை கைகொடுத்த நிலையில் வைகை அணை அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    மழை தொடர்ந்து பெய்ததால் அணையின் நீர்மட்டம் 70 அடியில் நீடித்தது. தற்போது மழை ஓய்ந்து நீர்வரத்து குறைந்துவிட்டது. இன்று காலை நிலவரப்படி 410 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. அணையின் நீர்மட்டம் 69.36 அடியாக உள்ளது. 719 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 150 கனஅடி நீர் கூடுதலாக சேர்த்து 869 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.80 அடியாக உள்ளது. 329 கனஅடி நீர் வருகிறது. 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51 அடியாக உள்ளது. 36 கனஅடி நீர் வருகிறது. 80 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.95 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 4.2, தேக்கடி 6 மி.மீ மழையளவு பதிவாகிறது.

    Next Story
    ×