என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பிப்ரவரி 1 முதல் 14ந் தேதி வரை 2 வார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்26 Jan 2022 6:22 AM GMT (Updated: 26 Jan 2022 6:22 AM GMT)
கரூர் மாவட்டத்தில் 2 வாரம் கோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கரூர்:
கரூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
கோழிக்கழிச்சல் நோய் ஒரு வகை நச்சுயிரியினால் ஏற்படும் தொற்று நோயாகும். இந்நோய் தீவனம், குடிநீர், காற்று மூலம் பரவும் தன்மை கொண்டது. நோய் கண்ட கோழிகள் வெள்ளையாகவும், பச்சையாகவும் கழியும். மூச்சுத் திணறல், நடுக்கம், வாதம், சோர்வு, தீவனம் உட்கொள்ளும் அளவு குறைந்தும் காணப்படும்.
நோய் பாதித்த கோழிகள், தலையை இரு கால்களுக்கும் இடையில் சொருகிக் கொள்ளும். இந்நோய் வெள்ளைக் கழிச்சல் நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந் நோய் தாக்கிய கோழிளில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கோழிக் குஞ்சுகளுக்கு 2 மாத வயதில் வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி அளிப்பதன் மூலம் இந்நோய் வராமல் தடுக்கலாம். இந்நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் 2 வார விழா நடத்தப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்திற்கென 2.17 லட்சம் டோசஸ் வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி பெறப்பட்டு அனைத்து கால் நடை நிலையங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் பிப்ரவரி 1ந்தேதி முதல் பிப்ரவரி 14ந்தேதி வரை கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை பெரு மருத்துவமனைகள், கால் நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள், கால்நடை கிளை நிலைய பகுதிகளில் இலவசமாகக் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்பட இருக்கிறது.
இத்தடுப்பூசியினை 2 மாத வயது முடிவடைந்த கோழிக்குஞ்சுகள் முதல் அனைத்து கோழிகளுக்கும் போடலாம். எனவே, விவசாயிகள், கோழி வளர்ப்போர் அனைவரும் வாய்ப்பைப் பயன்படுத்தி கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசியினை இலவசமாகத் தங்கள் கோழிகளுக்குப் போட்டுக் கொண்டு கோழிகளை இறப்பிலிருந்து அவற்றை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X