என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவு பயிற்சி
Byமாலை மலர்26 Jan 2022 5:21 AM GMT (Updated: 26 Jan 2022 5:21 AM GMT)
உடுமலை கல்வி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் பாட வாரியாக இரு தினங்கள் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.
உடுமலை:
மாணவர்களுக்கு எளிமையாக கற்பிக்க ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் கற்றல் விளைவு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அவ்வகையில் தற்போது உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என 'ஹைடெக் லேப்' உள்ள பள்ளிகளில் இப்பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி உடுமலை கல்வி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் பாட வாரியாக இரு தினங்கள் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று வருகின்றனர். கணிதம் பாடத்திற்கான கற்றல் விளைவு பயிற்சி, சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் வாயிலாக அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்:
பயிற்சி வகுப்பில், கற்றல் விளைவுகள், கல்வியின் இலக்குகள், பாடங்கள் தாண்டி கற்றல், தேசிய அடைவு ஆய்வுக்கு பின் உள்ள செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு பள்ளியில் 20 பேர் வீதம் பங்கேற்று வருகின்றனர் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X