search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பாளை அருகே கட்டிட தொழிலாளியின் மோட்டார் சைக்கிள் திருட்டு

    பாளை அருகே கட்டிட தொழிலாளியின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள உலகன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது33). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இவர் பாளை கே.டி.சி. நகர் புறநகர் பகுதியான ரவிசங்கர் நகரில் கட்டிட வேலை செய்து வந்தார்.

    அப்போது தனது மோட்டார் சைக்கிளை அதன் அருகே உள்ள நிழலில் நிறுத்தி இருந்தார். மாலையில் வீடு திரும்பும் போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அந்த மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும்.

    இதுகுறித்து அவர் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×