என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசு பஸ்கள் நிற்க தடை- அமைச்சர் நடவடிக்கை
Byமாலை மலர்25 Jan 2022 9:51 AM GMT (Updated: 25 Jan 2022 9:51 AM GMT)
குறைபாடுகளை சரி செய்யாததால் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இன்று காலை முதல் மாமண்டூர் சாலை வழி உணவகத்தில் நின்று செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள், கூடுதல் விலை பெறுவதாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் மாமண்டூர் பயண வழி வழித்தட உணவகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அங்கு சுகாதாரமின்றி தரமற்ற உணவை அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. அதன் பின்னரும் குறைபாடுகளை சரி செய்யாததால் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மாமண்டூர் சாலை வழி உணவகத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் உடனடியாக அதன் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தரமான உணவு வழங்கும் ஒப்பந்ததாரரை நியமிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள், கூடுதல் விலை பெறுவதாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் மாமண்டூர் பயண வழி வழித்தட உணவகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அங்கு சுகாதாரமின்றி தரமற்ற உணவை அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. அதன் பின்னரும் குறைபாடுகளை சரி செய்யாததால் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மாமண்டூர் சாலை வழி உணவகத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் உடனடியாக அதன் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தரமான உணவு வழங்கும் ஒப்பந்ததாரரை நியமிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலையை பெயர்த்து வீசியவர் கைது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X