என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாவூர்சத்திரத்தில் ரேசன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Byமாலை மலர்25 Jan 2022 9:38 AM GMT (Updated: 25 Jan 2022 9:38 AM GMT)
பாவூர்சத்திரம் அரசு தினசரி சந்தை செல்லும் வழியில் உள்ள ரேசன் கடை அறிவிப்பு பலகையில் எடை எந்திரம் பழுதாகி உள்ளது என்று எழுதிவிட்டு ஊழியர் அடிக்கடி வெளியில் சென்று விடுவதாக கூறி பொதுமக்கள் இன்று கடையை முற்றுகையிட்டனர்.
வீ. கே. புதூர்:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அரசு தினசரி சந்தை செல்லும் வழியில் ரேசன் கடை ஒன்று உள்ளது.
இந்த கடையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய நேரத்தில் உணவு பொருட்கள் வழங்காமல் அங்கு பணிபுரியும் அலுவலர் சரியான நேரத்திற்கு பணிக்கு வராமலும் பொதுமக்களை அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் தினமும் கடை வாசலில் உள்ள அறிவிப்பு பலகையில் எடை எந்திரம் பழுதாகி உள்ளது என்று எழுதி வைத்துவிட்டு அந்த ஊழியர் அடிக்கடி வெளியில் சென்று விடுவதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த ரேஷன் கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த கல்லூரணி பஞ்சாயத்து தலைவரிடம் பொதுமக்கள் ரேஷன் கடை நிலைமையை கூறினார்.
பின்னர் அவர் குடிமை பொருள் வழங்கல் தாசில்தாரிடம் பேசி முடிவு எடுப்பதாக உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X