search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எலும்புக்கூடாக காட்சியளிக்கும் மோட்டார் சைக்கிள்.
    X
    எலும்புக்கூடாக காட்சியளிக்கும் மோட்டார் சைக்கிள்.

    சாம்பவர்வடகரையில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

    சாம்பவர்வடகரையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது.
    சாம்பவர் வடகரை:

    சாம்பவர்வடகரை சோட்டையன் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி 
    (வயது 25).

    இவர் வழக்கம்போல் நேற்றிரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். 

    இந்நிலையில் நள்ளிரவில் ஏற்பட்ட புகை காரணமாக அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து பார்த்துள்ளனர். 

    அப்போது ஈஸ்வர மூர்த்தியின் மோட்டார் சைக்கிள் தீ வைக்கப்பட்டு முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக இருந்தது. 

    இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் சாம்பவர் வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிவிசுவநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×