என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நோய் தாக்கத்தால் தென்னை விவசாயிகள் கவலை
Byமாலை மலர்25 Jan 2022 8:25 AM GMT (Updated: 25 Jan 2022 8:25 AM GMT)
தேனி மாவட்டத்தில் நோய் தாக்குதலால் தென்னை விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
வருசநாடு:
கடமலை மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடை பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக காண்டாமிருக வண்டு தாக்குதல் காரணமாக தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தென்னை விவசாயிகளிடம் கேட்டபோது, பொதுவாக மழைக்காலம் முடிந்த பின்பு தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதல் அதிகளவில் காணப்படும். ஆனால் அதற்கான மருந்துகள் தெளித்தால் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.
ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவிலான காண்டாமிருக வண்டுகள் தென்னை மரங்களை தாக்கி வருகிறது. இந்த வகை காண்டாமிருக வண்டுகள் மரங்களின் இளம் குருத்துப்பகுதிகளை துளையிட்டு உள்ளே சென்று சாப்பிடும்.
இதனால் குருத்துப்பகுதி விரிவடையும் போது மற்ற தென்னை மட்டை முக்கோண வடிவத்தில் கத்தரித்தது போல இருக்கும். இதன் காரணமாக வழக்கமான உற்பத்தியை விட 15 முதல் 20 சதவீதம் வரை தேங்காய் உற்பத்தி குறையும்.
எனவே சம்பந்தப்பட்ட தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை மயிலை ஒன்றிய கிராமங்களில் முறையாக ஆய்வு மேற்கொண்டு காண்டாமிருக வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடமலை மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடை பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக காண்டாமிருக வண்டு தாக்குதல் காரணமாக தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தென்னை விவசாயிகளிடம் கேட்டபோது, பொதுவாக மழைக்காலம் முடிந்த பின்பு தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதல் அதிகளவில் காணப்படும். ஆனால் அதற்கான மருந்துகள் தெளித்தால் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.
ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவிலான காண்டாமிருக வண்டுகள் தென்னை மரங்களை தாக்கி வருகிறது. இந்த வகை காண்டாமிருக வண்டுகள் மரங்களின் இளம் குருத்துப்பகுதிகளை துளையிட்டு உள்ளே சென்று சாப்பிடும்.
இதனால் குருத்துப்பகுதி விரிவடையும் போது மற்ற தென்னை மட்டை முக்கோண வடிவத்தில் கத்தரித்தது போல இருக்கும். இதன் காரணமாக வழக்கமான உற்பத்தியை விட 15 முதல் 20 சதவீதம் வரை தேங்காய் உற்பத்தி குறையும்.
எனவே சம்பந்தப்பட்ட தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை மயிலை ஒன்றிய கிராமங்களில் முறையாக ஆய்வு மேற்கொண்டு காண்டாமிருக வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X