என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாணவி லாவண்யா குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக் கோரி இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்25 Jan 2022 7:02 AM GMT (Updated: 25 Jan 2022 7:02 AM GMT)
மாணவி லாவண்யா குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்:
அரியலூர் மாணவி லாவண்யாவை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவும், தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வரவும் வலியுறுத்தி, கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் நகரத்தலைவர் காமேஷ்வரன் தலைமையில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொதுச்செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெகதீஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.சக்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருச்சி கோட்ட தலைவர் வி.சி.கனகராஜ் கண்டன உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் இளையராஜா நன்றி கூறினார்.
ரெங்கசாமி, நிஷாந்த், ஷகில், முருகேஷ், கிருஷ்ணன், சதீஷ், கனகராஜ், பிரசன்னா, இளையராஜா, ஷங்கரி, வெற்றி, பூபதி, கோகுல், மணிகண்டன், விஜய், செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பா.ஜ.க. முன்னாள் மாவட்ட தலைவர் கே.சிவசாமி, கே.பி. மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X