என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முகக்கவசம் அணியும்போது கடைபிடிக்க வேண்டியவை என்ன?
முகக்கவசத்தை முறையாக அணிந்தால் மட்டுமே கொரோனா பரவலில் இருந்து பாதுகாக்கும் கவசமாக அது இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மூக்கையும், வாயையும் முழுமையாக மூடியபடி முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் நாம் அணிந்து இருக்கும் முகக்கவசம் தொளதொளவென இருக்க கூடாது. பலர் முகக்கவசத்தை மூக்கு தெரியும்படி வாயை மட்டும் மறைத்த நிலையில் அணிந்திருப்பார்கள். அதனால் எந்த பயனும் இல்லை. ஒரு சிலர் முகக்கவசத்தை காதில் தொங்கவிட்டு தாடையை மூடியபடி அணிந்திருப்பார்கள்.
இன்னும் சிலர் தொளதொளவென பெயர் அளவுக்கு மட்டுமே முகக்கவசம் அணிந்திருப்பார்கள். இதுவும் தவறானது ஆகும். இதுபோன்ற முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
முகக்கவசத்தை கழற்றும்போது மூக்கு மற்றும் வாயை தொடாமல் முகக்கவசத்தின் கயிற்றை பிடித்து அதனை அகற்ற வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் முகக்கவசமாக இருந்தால் அதனை பொதுவெளியில் வீசாமல் பாதுகாப்பான முறையில் அதனை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்