என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை உள்பட 3 மாவட்டங்களில் குடியரசு தினவிழா பாதுகாப்பு பணியில் 5,500 போலீசார்
Byமாலை மலர்24 Jan 2022 10:54 AM GMT (Updated: 24 Jan 2022 10:54 AM GMT)
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் குடியரசு தினவிழாவுக்காக 5,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
நெல்லை:
நாடு முழுவதும் நாளை மறுநாள் (26-ந்தேதி) குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கத்தை விட குடியரசு தின விழாவுக்காக கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குடியரசு தின விழாவுக்காக கலெக்டர்கள் கொடியேற்றும் பகுதிகளில் குறைந்த அளவு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.அவர்களும் அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா நடைபெறும் நெல்லை ஆயுதப்படை மைதானம், தூத்துக்குடி தருவை மைதானம், தென்காசி பள்ளி மைதானம் ஆகியவை இன்று முதல் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அங்கு தொடர்ந்து 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுழலும் காமிரா, சி.சி.டி.வி. காமிராக்களை அந்த பகுதியில் பொருத்தப்பட்டு வருகிறது.
நெல்லை புறநகர் மாவட்டத்தில் 1,500 போலீசாரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2,000 போலீசார், தென்காசி மாவட்டத்தில் 1,500 போலீசாரும், நெல்லை மாநகர பகுதியில் 500 போலீசாரும் என மொத்தம் 5,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
அனைத்து ரெயில் நிலையங்கள், அனைத்து பஸ் நிலையங்கள், மக்கள் கூடும் முக்கிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துறைமுகங்கள், பெரிய தொழிற் சாலைகள், அனல் மின் நிலையங்கள் ஆகியவற்றிலும் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது.
நெல்லை மாவட்டத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி விண்வெளி மையம் ஆகியவற்றிலும் வழக்கத்தைவிட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரெயில் நிலையங்கள், ரெயில்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X