என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
படிப்படியாக குறையும் தொற்றின் வேகம்-நெல்லையில் புதிதாக 252 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்24 Jan 2022 10:22 AM GMT (Updated: 24 Jan 2022 10:22 AM GMT)
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று புதிதாக 252 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா 3-ம் அலை காரணமாக தொற்று வேகம் அதிகரித்து வந்தது.
கடந்த வாரத்தில் 3 நாட்கள் தினசரி பாதிப்பு 700-ஐ தாண்டிய நிலையில் 3-ம் அலையின் உச்சமாக ஒரேநாளில் 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
தொற்றை தடுக்க மாவட்டம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனால் தொற்றின் வேகம் சற்று குறைய தொடங்கி உள்ளது. நேற்று மாவட்டத்தில் 608 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று புதிதாக 252 பேருக்கு தொற்று உறுதியானது.
இதில் மாநகரப்பகுதியை சேர்ந்த 73 பேர் அடங்குவர். தொடர்ந்து உயர்ந்து வந்த தொற்று பாதிப்பு இன்று பாதியாக குறைந்தது சற்று நிம்மதி அடைய செய்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X