என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நடுரோட்டில் கார் தீ பிடித்து எரிந்தது
Byமாலை மலர்24 Jan 2022 9:47 AM GMT (Updated: 24 Jan 2022 9:47 AM GMT)
ஆம்பூரில் நடுரோட்டில் தீ பிடித்து எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூரு பொம்மன ஹல்லி பகுதியை சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவர் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது 2 நண்பர்களுடன் புதுச்சேரி மாநிலத்திற்கு சென்று பல்வேறு இடங்களில் குறும்படம் எடுத்துவிட்டு நேற்று வேலூர் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் அண்ணா நகர் அருகே காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென காரின் முன்பக்கம் உள்ள எஞ்சினில் இருந்து புகை வருவதை கண்ட டிரைவர் காரை நிறுத்தினார்.
அப்போது காரில் இருந்த 2 பேரும் கீழே இறங்கினர். அதைத்தொடர்ந்து எஞ்சின் பகுதியிலிருந்து தீப்பற்றி மளமளவென கார் முழுவதும் தீ பரவியதால் கார் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது. இதில் காரில் வைக்கப்பட்டிருந்த உடமைகள், கேமரா உள்ளிட்ட கணினி பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X