search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ பிடித்து எரிந்த கார்
    X
    தீ பிடித்து எரிந்த கார்

    நடுரோட்டில் கார் தீ பிடித்து எரிந்தது

    ஆம்பூரில் நடுரோட்டில் தீ பிடித்து எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆம்பூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு பொம்மன  ஹல்லி பகுதியை சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவர் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 

    இந்நிலையில் அவரது 2 நண்பர்களுடன் புதுச்சேரி மாநிலத்திற்கு சென்று பல்வேறு இடங்களில் குறும்படம் எடுத்துவிட்டு நேற்று வேலூர் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் அண்ணா நகர் அருகே காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென காரின் முன்பக்கம் உள்ள எஞ்சினில் இருந்து புகை வருவதை கண்ட டிரைவர் காரை நிறுத்தினார். 

    அப்போது காரில் இருந்த 2 பேரும் கீழே இறங்கினர். அதைத்தொடர்ந்து எஞ்சின் பகுதியிலிருந்து தீப்பற்றி மளமளவென கார் முழுவதும் தீ பரவியதால் கார் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது. இதில் காரில் வைக்கப்பட்டிருந்த உடமைகள், கேமரா உள்ளிட்ட கணினி பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

    சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×