என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவை: உணவு ருசியாக இல்லை என மனைவியுடன் தகராறு -வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்24 Jan 2022 9:05 AM GMT (Updated: 24 Jan 2022 9:05 AM GMT)
மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
கோவை:
சிவகங்கை ராமசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜன் (வயது 31). இவர் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி காளீஸ்வரி(28). இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் காளிராஜனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று காளீஸ்வரி உணவு ருசியாக சமைப்பதில்லை என கூறி காளிராஜன் தகராறில் ஈடுபட்டார். அதனால் காளீஸ்வரி கோபித்துக் கொண்டு தனது மகனை அழைத்துக்கொண்டு விருதுநகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
இதனால் காளிராஜன் மனவேதனையுடன் இருந்து வந்தார். நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த காளிராஜன் விரக்தியடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காளிராஜனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியை சேர்ந்தவர் முனுசாமி (38). இவர் கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று முனுசாமி ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு வேலைக்கு சென்றார்.
அங்கு உணவு இடைவெளியில் அவர் அங்கிருந்த பனை மரத்தில் நுங்கு பறிப்பதற்காக ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக முனுசாமி மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்துத அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X