search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்கள் போராட்டம்
    X
    தூய்மை பணியாளர்கள் போராட்டம்

    தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    நாகை நகராட்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 100-க்கும் மேற்பட்ட 
    ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். 

    ஒப்பந்தக்காரர் கட்டுப்பாட்டில் ஊதியம் வழங்கப்படும் அவர்களுக்கு தொடர்ந்து கால தாமதமாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஜனவரி மாதத்தின் ஊதியம் இதுவரை வழங்காததால், 
    தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் இன்று நகராட்சி அலுவலகம் முன்பு திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    அப்போது சரியான தேதியில் ஊதியம் வழங்க வேண்டும்,   
    ஊதியத்தை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், 
    பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 
    கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

    தகவல் அறிந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை 
    நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை 
    ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×