என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண்கள் பாதுகாப்பு குறித்து வீடு வீடாக விழிப்புணர்வு பிரசாரம்
Byமாலை மலர்24 Jan 2022 7:12 AM GMT (Updated: 24 Jan 2022 7:12 AM GMT)
திருவாரூர் மாவட்ட போலீசார் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்து வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
திருவாரூர்:
தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழ்நாடு காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் உள்ள நகர பகுதிகளான
அழகிரி காலனி, காட்டு காரத்தெரு, தெற்குவீதி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
ஞாயிறு முழுநேர ஊரடங்கால் வீட்டிலேயே இருப்பதை பயன்படுத்தி திருவாரூர் பெண்கள் குழந்தைகள் எதிரான குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் மணிமேகலை மற்றும் நகர உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா உள்ளிட்ட போலீசார் வீடு வீடாக சென்று பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களை தடுப்பது குறித்து பெண்களிடம் எடுத்துரைத்தனர்.
பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் உடனே போலீசாரை தொடர்பு கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதோடு அதற்கான இலவச
உதவி எண்கள் 181, 1098 அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X