search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    செல்போன் கடை பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் பணம் - பொருட்கள் கொள்ளை

    செல்போன் கடை பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    திருச்சி :

    திருச்சி மாவட்டம் கல்லக் குடி அடைக்கலம் காலனி பகு தியைச் சேர்ந்தவர் தீபக் குமார். இவர் புள்ளம்பாடி கடை வீதியில் செல்போன் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார்.  இந்த  நிலையில்  நேற்று முன்தினம் இரவு  11  மணி அளவில் வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீடு திரும்பினார். 

    நேற்று முழு ஊரடங்கு என்பதால் கடையை திறக்க வில்லை. ஆனாலும் கடை அருகே வந்து பார்த்தபோது அங்கு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து தீபக்குமார் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையில் இருந்த   6 செல்போன்கள் மற்றும் பணம் ரூ.10,000- ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.    அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
    Next Story
    ×