என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் சிக்கிய மோட்டார் சைக்கிள்
திருவள்ளூர்:
சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று இரவு 8.55 மணியளவில் ஆலப்புழா நோக்கி ஆலப்புழா எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
திருவள்ளூரை அடுத்த செவ்வாய்ப்பேட்டை ரெயில்வே கேட் பகுதியில் ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ரெயில் வருவதை பார்க்காமல் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றார். ரெயில் அருகே வந்ததால் அதிர்ச்சி அடைந்த வாலிபர் தனது தண்டவாளத்திலேயே போட்டு விட்டு தப்பி ஓட்டம் பிடித்தார். இதனால் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜினுக்கு அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக்கொண்டது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மோட்டார்சைக்கிளை எக்ஸ்பிரஸ் ரெயில் இழுத்துச் சென்றது.
புட்லுர் ரயில் நிலையம் அருகே வந்தபோது ரெயிலுக்கு அடியில் சத்தம் வருவதை உணர்ந்த ரயில் டிரைவர் ரெயிலை உடனடியாக நிறுத்தினார். அப்போது ரெயில் என்ஜினில் மோட்டார்சைக்கிள் சிக்கி இருப்பது தெரிந்தது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு ரயிலுக்கு அடியில்சிக்கி நசுங்கி இருந்த மோட்டார் சைக்கிளை உடைத்து வெளியே எடுத்தனர். இதனால் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புட்லூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்