search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு

    ஜோலார்பேட்டை அருகே பெண்ணிடம் 4 பவுன் செயினை பைக் கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பெரியகம்பியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் துளசி நாதன் இவரது மனைவி கலைவாணி (வயது 45) இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான பசு மாடு உள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் பசு மாட்டிற்கு தண்ணீர் எடுத்து கொண்டு வர அருகில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்று மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் கலைவாணி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார்.

    இதனால் கலைவாணி கூச்சல் போடவே கொள்ளையன் அங்கிருந்த மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். 

    இது குறித்து கலைவாணி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×