search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வாகனம் மோதி வாலிபர் பலி

    நாட்டறம்பள்ளி அருகே வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த கூத்தாண்டகுப்பம் மின்சாரம் அலுவலகம் எதிரே நேற்று இரவு வாணியம்பாடியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 40 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் நடந்து சென்றார். 

    அப்போது அடையாளம் தெரியாத வாகனம் நடந்த சென்றவர் மீது எதிர்பாரதவிதமாக மோதியது. இதனால் அவர்  சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்-? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×