search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகார்
    X
    புகார்

    செஞ்சி அருகே இளம்பெண் சாவில் மர்மம்- போலீசில் தந்தை புகார்

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இளம்பெண் உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
    செஞ்சி:

    செஞ்சி அருகே மாதப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. அவரது மகன் சிலம்பரசன். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் நரசிங்கநல்லூரை சேர்ந்த அண்ணாதுரை மகள் அபிலா (வயது 23) என்பவருக்கும் கடந்த 2.4.2021 அன்று திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின்போது நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சீதனமாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் மேலும் நகை-பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அகிலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்பட்டது.

    அவரை சிகிச்சைக்காக கீழ்பெண்ணாத்தூருக்கும் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கும் அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    எனவே தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அண்ணாதுரை நல்லான் பிள்ளை பெற்றாள் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×