search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    கஞ்சா விற்ற வாலிபர் கைது

    கரூரில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கரூர்:

    தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

    பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தியும், கஞ்சா விற்பனை குறித்து தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றும் அதிரடி நடவடிக்கை எடுத்து கஞ்சா விற்பனையை கட்டுபடுத்தி வருகின்றனர். 

    இந்நிலையில் கரூர் 5 ரோடு அமராவதி பாலம் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கரூர் நகரப் போலீசாருக்கு தகவல் வந்தது. 

    இதையடுத்து அப்பகுதியில் போலீசார் நேற்று நடத்திய சோதனையில் அங்கு கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த வெங்கமேடு  பெரியகுளத்துப்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்கிற சந்தோஷ்குமார் (39) மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

    அவரிடமிருந்து ரூ.1,000 மதிப்புள்ள 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×