search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பொள்ளாச்சியில் இளம்பெண் தற்கொலை

    திருமணமாகாத ஏக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    பொள்ளாச்சி:
     
    பொள்ளாச்சி ராமபட்டினம் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் காளி. இவரது மகள் ரேகா (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்ட லில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் ரேகாவிற்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.

    அவரது குடும்பத்தினர் அவருக்கு வரன் தேடி வந்தனர். ஆனால் ரேகாவிற்கு சரியான வரன் அமையவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். நேற்று வழக்கம்போல வேலை முடித்து விட்டு ரேகா வீடு திரும்பினார்.

    பின்னர் சாப்பிட்டுவிட்டு இரவு அறையில் தூங்க சென்றார். காலை வெகுநேரமாகியும் அவர் கதவை திறக்காததால் அவரது அண்ணன்  அய்யனார் அவரது அறைக்கு சென்று கதவை தட்டினார்.

    கதவை திறக்காததால் அய்யனார்கதவை திறந்து உள்ளே சென்றார். அங்கு ரேகா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×