search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலத்தில் பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்றவர் கைது

    சேலத்தில் பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    சேலம்:

    சேலம் செவ்வாய்ப் பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் நேற்று கபிலர் தெரு மீனாட்சி அம்மன் கோவில் பின்புறம் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு ஒரு வாலிபர் மொபட்டில் மூட்டைகளை வைத்துக் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு குட்கா பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார். இதை கண்ட சப்-இன்ஸ்பெக்டர் பாலன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அவர் செவ்வாய்பேட்டை அப்பு செட்டித் தெருவை சேர்ந்த வினோத்குமார் (வயது 36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 

    அவரது மொபட்டில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள், ரூ.5700, மொபட் ஆகியவற்றை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×