search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்
    X
    திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்

    ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தகவல் தெரிவித்து உள்ளார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டிற்கான ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

    9-ம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளுக்கும் கல்வி உதவித்தொகை திட்டம் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. 

    இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக 6.1.2022 முதல் இணையதளம் திறக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்க அடுத்த மாதம் 10&ந்தேதி இறுதிநாள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    எனவே, மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கிருத்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்கள் பெற்று உரிய முறையில் பூர்த்திசெய்து, சாதிச்சான்று, வருமானச்சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்புகணக்கு புத்தகநகல் 
    மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் இணைத்து 
    இணையதள வழியில் விண்ணப்பித்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×