search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர்.

    விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

    திருவையாறில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    திருவையாறு:

    திருவையாறு தாலுகா அலுவலகம் முன்பு அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எம்.ஜி.எம். சுப்பிரமணியன் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், நீலமேகம், சாமிவேல், கலியமூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா, நகர செயலாளர் செந்தில், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிகள் கலந்து கொண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    Next Story
    ×