search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் வனத்துறை சார்பில் புகைப்பட போட்டி

    ஈரநிலங்கள் பாதுகாப்பு குறித்து போட்டி நடக்கிறது
    கோவை:

    கோவை மாவட்ட வனத்துறை சார்பில், ஈர நிலங்கள் பாதுகாப்பு குறித்து, இணையதளம் மூலம், ஈரநிலம் புகைப்பட போட்டி நடக்கிறது. 

    இது குறித்து, கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் கூறியதாவது:- உலக ஈர நில நாளினை முன்னிட்டு கோவை மாவட்ட அளவில் புகைப்பட போட்டி நடத்தப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில் வனத்துறை சார்பில், ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலான விழா விரைவில் நடைபெற உள்ளது. 

    இதனையொட்டி ஜனவரி 26-ந் தேதி வரை இணையதளம் மூலம் நடைபெறும் ஈரநிலம் புகைப்படப் போட்டியில் தகுதியானவர்கள் பங்கேற்கலாம். பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், ஈரநில நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஈர நிலங்கள் தொடர்பான புகைப்படங்களை ஜன.,26க்குள் இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

    முதல் 3 இடங்கள் பிடித்தோரை தேர்வு செய்ய உள்ளது. பரிசளிப்பு விழா தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×