search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பெண் பிணம்

    போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 52). கூலி  தொழிலாளி.  இவர்களுக்கு சந்திரசேகர் (32) என்ற மகன் உள்ளார். இந்தநிலையில் கணவன்&மனைவி தகராறு காரணமாக சரஸ்வதி தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். 

    சந்திரசேகர் ஒரு  ஓட்டலில் வேலை செய்து  தனது குடும்பத்தோடு தனியாக வசித்து வருகிறார். அடிக்கடி தனது தாயாரை சந்திரசேகர் சென்று பார்த்துவிட்டு வருவது வழக்கம். மேலும் சரஸ்வதிக்கு உடல்நிலை சரியில்லாததால் அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். 

    இந்நிலையில் சம்பவத்தன்று சரஸ்வதி வீட்டின் அருகில் வசித்து வரும் ஒருவர் சந்திரசேகரை போனில் அழைத்து சரஸ்வதியின் வீட்டின் கதவு திறக்கப்படாமல் உள்ளது என்றும், வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கூறினார்.
     
    இதையடுத்து சந்திரசேகர் தனது அம்மா வீட்டிற்கு விரைந்து வந்தார். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சரஸ்வதி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். 

    பின்னர் இதுகுறித்து  ஆர்.எஸ்.புரம்  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
     
    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல்நலக் குறைவினால் சரஸ்வதி இறந்து போனாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×