search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாபநாசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர்.
    X
    பாபநாசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர்.

    அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    பாபநாசத்தில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    பாபநாசம்:

    பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா 
    விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், நிவாரணமும், வழங்க கோரி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சை வடக்கு மாவட்ட பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராம்குமார், தலைமையில் நடைபெற்றது.

    முன்னதாக அனைவரையும் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி வரவேற்று பேசினார். 

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாயப் பிரிவு தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்.எல்.ஏ. இளமதி சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் சூரியநாராயணன், ராமச்சந்திரன், கோபிநாதன், பேரூர் செயலாளர்கள் முருகன், காமராஜ், சின்னதுரை, பொதுக்குழு உறுப்பினர் மோகன், மாவட்ட கவுன்சிலர் கண்ணபிரான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பாபநாசம் பேரூர் செயலாளர் சின்னையன் நன்றி கூறினார்.
    Next Story
    ×