search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    X
    அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    பூதலூரில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்ககோரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    பூதலூர்:

    பூதலூர் தாலுகா அலுவலக சாலையில் பூதலூர் ஒன்றிய அ.தி.மு.க. மற்றும் திருக்காட்டுப்பள்ளி நகர அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பூதலூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பூதலூர் ஒன்றிய அ.தி.மு.க. துணைச்செயலாளர் மாரியய்யா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் காமராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் அய்யாராசு.

    பூதலூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கலியமூர்த்தி, பூதலூர் தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ராமசாமி, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு 
    சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×