search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்ணார்பேட்டையில் சாலையில் மணல் குவியலை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்
    X
    வண்ணார்பேட்டையில் சாலையில் மணல் குவியலை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்

    நெல்லையில் சாலைகளை சுத்தப்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள்

    முழு ஊரடங்கையொட்டி சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. இதை பயன்படுத்தி சாலையோரம் குவிந்து கிடந்த மணல் குவியல்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    நெல்லை:

    முழு ஊரடங்கையொட்டி சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

    இதனையொட்டி நெல்லை மாநகர பகுதியில் உள்ள முக்கிய சாலைகளான வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், சந்திப்பு மேம்பாலம், சமாதானபுரம், பாளை பஸ் நிலையம் சாலை களும் வெறிச்சோடின-.

    இதை பயன்படுத்தி சாலையோரம் குவிந்து கிடந்த மணல் குவியல்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    வண்ணார்பேட்டையில் சுகாதார ஆய்வாளர் இளங்கோ மேற்பார்வையில் ஊழியர்கள் மணல் குவியல்களை அகற்றி சுத்தம் செய்தனர்.

    Next Story
    ×