search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.
    X
    சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

    ஆழ்வார் திருநகரி கோவிலில் வருஷாபிஷேகம்

    ஆழ்வார்திருநகரி குண்டு தெருவிலுள்ள ஸ்ரீ ஈசான உச்சினி மாகாளியம்மன் கோவில் 2-வது வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி குண்டு தெருவிலுள்ள ஸ்ரீ ஈசான உச்சினி மாகாளியம்மன் கோவில் 2-வது வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

    கணேசன் குருக்கள் தலைமையில் வேத ஆகம முறைப்படி கணபதி பூஜை, மகாலட்சுமி பூஜை, கும்ப பூஜை, யாகசாலை பிரவேசம் மற்றும் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி தீபாராதனை நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்ன தானமும் நடைபெற்றது.

    பக்தர்கள் சமூக இடைவெளியை கடை பிடித்தும், முக கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×