என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நரசிம்மர் கோவிலில் பிரதிஷ்டை விழா
Byமாலை மலர்23 Jan 2022 6:30 AM GMT (Updated: 23 Jan 2022 6:30 AM GMT)
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் நரசிம்மர் பீடம் அமைந்துள்ளது. இங்கு தென்தமிழகத்தில் முதன் முறையாக விக்ரஹ ரூபமாக ஸ்ரீமகா சூலினி துர்க்கா எழுந்தருளியுள்ளது. இதற்கான பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் ஸ்ரீஸாம் ராஜ்ய லட்சுமி நரசிம்மர் பீடம் அமைந்துள்ளது. இங்கு தென்தமிழகத்தில் முதன் முறையாக விக்ரஹ ரூபமாக ஸ்ரீமகா சூலினி துர்க்கா எழுந்தருளியுள்ளது.
இதற்கான பிரதிஷ்டை விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஸாம்ராஜ்யநரசிம்ம பீட நிறுவன தலைவர் மகாதேவன், துணைத்தலைவர் மகேஷ்வரகனபாடிகள், பொரு ளாளர் சங்கர சுப்பிரமணியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இங்கு ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று ஸ்ரீமஹா சூலினி துர்க்கை ஹோமமும், பவுர்ணமி தினத்தன்று சதுர்தசி பூஜையும் நடைபெறுகிறது.
மஹா சூலினி துர்க்கையை தொடர்ந்து தேய்பிறை அஷ்டமி, சதுர்தசி, பவுர்ணமி, அமாவாசை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் மாலை நேரத்தில் (சந்திரன் இருக்கும் நேரத்தில்) வழிபாடு செய்தால் எதிரிதொல்லைகள், சூழ்ச்சிகள், பில்லி, சூனியம், ஏவல் மற்றும் செய்வினை கோளாறுகள் நீங்கும்.
மேலும் ராகு, செவ்வாய் திசை நடப்பவர்கள் ஸ்ரீமகா சூலினி துர்க்கையை தொடர்ந்து வழிபாடு செய்தால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
செவ்வாய் தோஷ நிவர்த்திக்கும், ரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து வித நோய்கள் நிவர்த்திக்கும், பூமி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் துர்க்கையை வழிபாடு செய்தால் மங்களம் உண்டாகும் என்பது ஐதகம்.
எனவே பக்தர்கள் மஹா சூலினி துர்க்கையை வழிபட வருகை தரும்படி ஸ்ரீஸாம்ராஜ்ய நரசிம்மர் பீடத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X