என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மனை வரன்முறை-பொதுமக்கள் ஆர்வம்
Byமாலை மலர்23 Jan 2022 5:53 AM GMT (Updated: 23 Jan 2022 5:53 AM GMT)
வரன்முறைப்படுத்தப்படாத மனையிடங்களால் உள்ளாட்சி அமைப்புக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளுடன் 4 மண்டலங்களின் கீழ் இயங்கி வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் வளர்ந்து வரும் நகரம் என்ற நிலையில் நகரில் ஏராளமான மனைப்பிரிவுகள், வீட்டு மனைகள் நாளுக்கு நாள் புதிதாக ஏற்பட்டு வருகிறது. ஏராளமான மனைப்பிரிவுகள் உரிய அங்கீகாரம் இன்றி அமைக்கப்பட்டு விற்பனை செய்து வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.
இதனால் உரிய அடிப்படை வசதிகள் செய்தல் மற்றும் வங்கி கடன் உதவி பெறுதல் ஆகியவற்றுக்கு வழியில்லாத நிலை உள்ளது.
மேலும் வரன்முறைப்படுத்தப்படாத மனையிடங்களால் உள்ளாட்சி அமைப்புக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மனையிடங்கள், மனைப்பிரிவுகள் வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
முதல் மண்டலத்தில் வேலம்பாளையம் அலுவலகம், 2வது மண்டலத்தில் நஞ்சப்பா நகர் அலுவலகம், 3-வது மண்டலத்தில் நல்லூர் அலுவலகம், 4வது மண்டலத்தில் எஸ்.ஆர்., நகர் விநாயகர் கோவில் வளாகம் ஆகியவற்றில் இதற்கான சிறப்பு முகாம் நடந்தது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று மனைகள் வரன்முறைப்படுத்த விண்ணப்பம் அளித்து கட்டணம் செலுத்தினர்.
மண்டல வாரியாக பொறியியல் பிரிவு மற்றும் வருவாய் பிரிவு ஊழியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X