search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பொதுத்தேர்வு- பள்ளி மாணவர்கள் பட்டியல் தயாராகிறது

    மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற ஜனவரி 19-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
    திருப்பூர்:

    நடப்பு கல்வியாண்டிற்கான 10 மற்றும் பிளஸ் -1 பொதுத்தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 

    பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு அனைத்து உயர்நிலை, மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற ஜனவரி 19-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. 

    சில பள்ளிகளில் மாணவர்களின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் ஏற்பட கல்வித்துறை ஜனவரி 31-ந்தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. 

    இதுவே கடைசி வாய்ப்பு. கூடுதல் அவகாசம் வழங்கப்படாது எனவும் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்ததால் திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் முழு வீச்சில் பணிபுரிந்து வருகின்றனர்.
    Next Story
    ×