என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் 26 பவுன் நகைகள் திருட்டு
Byமாலை மலர்22 Jan 2022 11:14 AM GMT (Updated: 22 Jan 2022 11:14 AM GMT)
மதுரையில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் 26 பவுன் நகைகள் திருடப்பட்டன.
மதுரை
மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கசாமி. இவரது மனைவி முத்துமீனாள் (வயது 39). இவர் சம்பவத்தன்று ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் மதுரைக்கு பஸ்சில் வீடு திரும்பினார்.
பஸ் நிலையத்தில் இருந்து முத்துமீனாள் ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டார். வழியில் வாழைத்தோப்பில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்று உள்ளார்.
அப்போது ஆட்டோ டிரைவரிடம் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்றதாக தெரிகிறது. அதன் பிறகு முத்துமீனாள் ஆட்டோவில் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
பின்னர் முத்துமீனாள் தனது உடமைகளை சோதித்து பார்த்தபோது பேக்கில் இருந்த 29 பவுன் தங்க நகை திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துமீனாள், இது தொடர்பாக கீரைத்துறை குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X