என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சண்டிகேஸ்வரருக்கு புதிய சிலை பிரதிஷ்டை
Byமாலை மலர்22 Jan 2022 10:49 AM GMT (Updated: 22 Jan 2022 10:49 AM GMT)
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சண்டிகேஸ்வரருக்கு புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
நாகர்கோவில்:
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மலவர் சன்னதி அருகில் உள்ள சண்டிகேஸ்வரர் சிலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சேதமானது. இதனால் சண்டிகேஸ்வரர் சன்னதி மூடப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சுசீந்திரம் திருக்கோவில் நிர்வாக இணை ஆணையர் ஞானசேகர் உத்தரவின் பேரில் மீண்டும் சண்டிகேஸ்வரர் சிலையை நிறுவ கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி மயிலாடி மார்த்தாண்டபுரத்தில் சண்டிகேஸ்வரர் சிலை புதிதாக செய்யப்பட்டது. 2Ð அடி உயரமுள்ள உயர முள்ள சிலை நேற்று காலை தாணுமாலயன் சுவாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. மூலவர் சன்னதி அருகில் உள்ள கலச அறையில் சண்டிகேஸ்வரர் சிலை, சுற்றிலும் நெல்மணிகள் கொட்டப்பட்டு அதன் உள்ளே வைக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் கண்காணிப் பாளர் சிவக்குமார், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X