search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்- 3 வாலிபர்கள் கைது

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 3 வாலிபர்களை கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக காஞ்சிபுரம் போதைப் பொருள் கடத்தல் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் போதைப்பொருள் கடத்தல் பிரிவு போலீசார் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் கண்காணித்து வந்தனர்.

    அப்போது விரைவு ரெயிலில் வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேரிடம் சோதனை செய்ததில் அவர்கள் வைத்திருந்த மூட்டைகளில் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் போதைப்பொருள் கடத்தல் பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பத்மநாபன் (22), தனஞ்ஜெயா (22), ஹரிஹர சகா (22) ஆகிய 3 பேரை கைது செய்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இவர்கள் ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், தர்மபுரி, திருப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் வேலை செய்யும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×